
களங்கமில்லா நட்பு,
கவலைமறந்த சிரிப்பு,
கண்ணீர் காணா கண்கள்
கனத்திடாத இமைகள்
அன்றாடம் களிப்பு
அவ்வப்போது படிப்பு
வரவில்லாச் செலவு
வாலிபத்தின் கனவு
வசந்தகாலக் குளிர்ச்சி
வானளாவிய மகிழ்ச்சி,
கேளிக்கையான நடிப்பு
வேடிக்கை நிறைந்த வகுப்பு
தேர்வுக்காலம் நெருங்குகையில்
சோர்வுக்காணும் மனத்துடிப்பு
தித்தித்த நொடிகள்
திகட்டாத நிமிடங்கள்
தீஞ்சுவையை அள்ளித்தந்த
தேன்தொனிந்த நாட்கள்...
ஆயுள்வரை மறக்கமுடியாத
ஆனந்த நினைவுகளை
ஆண்டுசிலவற்றில் அளித்துவிட்டு
மாண்டுபோன கல்லூரிகாலம்தனை
மீண்டும் திரும்பபெற
வேண்டுகிறது என் இதயம்!!!
No comments:
Post a Comment