
அம்மா என அழைக்கும்
அன்பு மகனின் குரல்
அத்தை என விளிக்கும்
ஆசை மருமகளின் அரவணைப்பு
பாட்டி யென பாசமாய்ப்
பேசும் பால்மணம் மாறாத
பச்சிளம் பேத்தி..
அள்ள அள்ளக் குறையாத
இவர்களின் அன்புக்கடலில்
திளைத்துக் கொண்டிருந்த நான்
திடுக்கிட்டு விழித்தேன்...
கலீர் எனக் காலையில் அடித்த
எங்கள் முதியோர் காப்பக
மணியின் ஒலியில்!!!!!!
No comments:
Post a Comment