Thursday, July 19, 2012

அவள்



பெண்ணின் பெருமையை உணர்வோம்- இந்த
மண்ணுலக மவளை மதித்திட செய்வோம்

செல்வத்தில் சிறந்த செல்வம்- அது
கள்ளம் கபட மிலா பிள்ளைச் செல்வம்
மழலை இல்லா மனிதன் வாழ்வில்
மகளாய்ப் பிறந்து மனமகிழ்  வளிப்பாள்

தனிமையும் வெறுமையும் சூழ்ந்து- ஒரு
துணையின்றி வாடும் ஆடவன் வாழ்வில்
இனிமையும் இன்பமும் சேர்க்கும்- நல்
துணையாய் வந்து துயரங்கள் களைவாள்

பொன்னையும் பொருளையும்  வேண்டி- பெரும்
போர்க்களம் செய்திடும் வையக மதனில்
தன்னலம் துளியும் இல்லா- ஒரு
அன்னையாய் அன்பினை அள்ளித் தருவாள்

அண்டத்தில் சிறந்தவள் பெண்ணே
அன்பினை வளர்ப்பவள் பெண்ணே
மங்கையை வணங்கிக் காத்தால்
வையகம் சென்றிடும் முன்னே...