Tuesday, November 7, 2017

புதிர்

மனமெங்கும் ரணமாய் மாறிற்று இன்று
மருந்திடக் காலம்தான் வந்திடுமோ?
மருந்திட வந்திடும் காலம் அதனையும் - என்
கலிதான் விரட்டி யடித்திடுமோ!!!

நினைப்பது ஒன்று நிகழ்வது ஒன்று
குழப்பத்தால் சூழ்ந்திட்ட வாழ்வதனில்
நிம்மதி ஒளியை என்மனம் அடைய
காலம்தான் பாதை காட்டிடுமோ!!!

எங்கெங்கு தேடினும் எவ்விடம் ஓடினும்
அமைதியை மட்டும் காண வில்லை
என்னுள்ளே உள்ளது என்கின்றர் அறிஞர்
எங்குள்ள தென்பது விளங்கவில்லை..

காலமிட்ட முடிச்சுகளைக் கடவுள்  அவிழ்ப்பாரென
கோல  மிட்டுரைக் கின்றன  சாத்திரங்கள்
ஓலமிடும் என்குரல் கேட்டிட விழைகின்றேன்
ஞாலத்தின் முதல்வனான இறைவனுக்கு !!!!