பிறை நிலவாய் இருந்த என்னை
முழு மதியாய் மாற்றியதில்
"இறை"-யதனின் பொருளதனை
இவள் மனதில் புகுத்தி விட்டாய்
கரையதனைப் பிரியாத
கடலன்னை யதுபோல- என்
உயிருறையும் நொடி வரையில்
உனக்காகத் துடித்திருப்பேன்!
தேடிச்செல்லுகையில்
தேவதைகள் தெரிவதில்லை
வாடி வருந்துகையில் வாழ்க்கை
விடையளிப்பதில்லை
மாயம் உலகென்று
உணரும் வரை மனம் காணும்
காயம் தனையாற்றக்
காலம் முன் வருவதில்லை!