Friday, November 20, 2009
பேதைமை
அகப்பட்ட
அரைநொடிக்குள்
அடுத்தவர்
அழிவினை
அரியணையாக்கி
ஆட்சிசெய்யத் துணியும்
அற்பர்களுக்கிடையில்
அடியவள்மட்டும்
சுகித்துக்கொண்டிருக்கிறேன்
அறியாமையென்னும்
சுழலில் சிக்கிச்
சிறுபிள்ளைத்தனமாய்!!!!!
Thursday, November 19, 2009
கனவு
விண்ணப்பம்
அன்றொரு நாள்
அக்கினியாய் அவதரித்து
அழகிய உயிர்களை
அஸ்தியாக்கி
அகங்குளிர்ந்தாய்....
வேறொரு நாள்
வெள்ளலையாய்
வெகுண்டெழுந்து
எள்ளளவும் தயங்காமல்
எண்ணற்ற உடல்களை
உள்ளிழுத்துக்
குதூகலித்தாய்....
பின்னொரு நாள்
பூகம்பமாய்ப்
பூப்போன்ற மனிதர்களை
புதைகுழிக்குள் தள்ளிவிட்டுப்
புரியாமல் புன்னகைத்தாய்...
இப்படி
நாளொரு விதமாய்
நீ சீறுவதால்
நாங்கள்
நஷ்டப்பட்டவை
நாவிலடங்கா!!!!!
இன்பத்தை
எதிர்நோக்கும்
உள்ளங்களுக்கு
இன்னலை மட்டுமே
நல்கிடும்
இயற்கையே.....
எங்களை
இனியாவது
வாழவிடு!!!!!!!!!!!!!!
வீறு கொண்டு எழு
மனிதா
நீ சாதிக்கப்பிறந்தவன்
உனக்கு பாதகம் செய்யும்
பகைவரைக் கண்டு
பதறிவிடாதே...
மனிதா
நீ வாழப்பிறந்தவன்
உன்னை வீழ்த்த நினைக்கும்
உள்ளங்களை எண்ணி
உடைந்துவிடாதே...
மனிதா
நீ போற்றுதலுக்குரியவன்
உன்னைத் தூற்றத்துணியும்
உதடுகளை நினைத்துத்
துயரடையாதே...
மனிதா
உன் கண்ணீர் விலைமதிப்பற்றது
உன்மீது கருத்தில்லாதவருக்காகச்
சிந்தி அதனை வீணடித்துவிடாதே...
மனிதா
தோல்விகள் உன்னைத்
துரத்தும்பொழுது
துவண்டுவிடாதே
துள்ளிவரும் அலைகள்
போலத் துணித்தெழுந்திடு
ஏனென்றால்....
தோல்வி என்பது முடிவல்ல.....
வெற்றியின் முதற் பக்கம்!!!!!!!!!!
கேள்வி
ஆனந்தம்
உலகில் உள்ள வண்டுகளெல்லம்
என்னையே சுற்றி வட்டமிடுகின்றன...
தேனினும் இனிய உன் உன்னத
நட்பின் மழையிலல்லவா
நான் நனைந்துகொண்டிருப்பது!!!!
களங்கமில்லாத உன் நட்பின்
கதகதப்பில் குளிர்காய்வதால்
துன்பத்தால் ஈரமாகிய என்
இமைகள் வறண்டு,
இன்பத்தால் மட்டுமே
ஈரமாக தொடங்கிவிட்டது
என் இருண்ட இதயம்..!
வானுலகின் அழகிய தேவதைகளெல்லாம்
என் மீது அழுக்காறு கொண்டு
வாதிடுகின்றன,
வல்லவனாம் அந்த இறைவனிடம்...
சுவர்க்கதில் காணக்கூடிய களிப்பினை
பூவிலகில் பூத்திருக்கும்
பூவையான எனக்கு மட்டும் சொந்தமாக்கியதற்கு…
வலியைமட்டுமே கண்டிருந்த எனக்கு
வாழ்வின் வண்ணத்தையும் காட்டிய
விலைமதிப்பில்லாத உன் நட்பு
முறிந்திடும் நாளது நான்
இறந்திடும் நாளாகத்தான்
நிச்சயமாய் இருக்க முடியும்!!!!!
ஏக்கம்
களங்கமில்லா நட்பு,
கவலைமறந்த சிரிப்பு,
கண்ணீர் காணா கண்கள்
கனத்திடாத இமைகள்
அன்றாடம் களிப்பு
அவ்வப்போது படிப்பு
வரவில்லாச் செலவு
வாலிபத்தின் கனவு
வசந்தகாலக் குளிர்ச்சி
வானளாவிய மகிழ்ச்சி,
கேளிக்கையான நடிப்பு
வேடிக்கை நிறைந்த வகுப்பு
தேர்வுக்காலம் நெருங்குகையில்
சோர்வுக்காணும் மனத்துடிப்பு
தித்தித்த நொடிகள்
திகட்டாத நிமிடங்கள்
தீஞ்சுவையை அள்ளித்தந்த
தேன்தொனிந்த நாட்கள்...
ஆயுள்வரை மறக்கமுடியாத
ஆனந்த நினைவுகளை
ஆண்டுசிலவற்றில் அளித்துவிட்டு
மாண்டுபோன கல்லூரிகாலம்தனை
மீண்டும் திரும்பபெற
வேண்டுகிறது என் இதயம்!!!
பக்தி
நினைவு
ஊஞ்சல்
புதிர்
நட்பு
நிகழ்வு
தேவதை
என்
விழிகளில் அழுதிட
இதழ்களில் சிரித்திட
இமைகளில் உறங்கிட
இம்சையை இரசித்திட
வெற்றியில் களித்திடத்
தோல்வியில் துவண்டிட
முத்ததில் மகிழ்த்திட
சித்தத்தை செதுக்கிட
உதிரத்தைத் துடைத்திட
உயிருடன் கலந்திட
இன்பத்தைப் பெருக்கிட
இன்னலைக் களைந்திட
இறைவனால் பரிசளிக்கப்பட்ட
இனிய தேவதை நீ......
அம்மா,
உனக்கு நான் பட்ட கடனதை
எத்தனை பிறவி எடுத்தும்
தீர்க்க முடியாத நிலையில்
ஒன்று மட்டும்
உறுதி செய்கிறேன்....
உன்
உயிர்த்துளியாகக்கருதி
எனக்கு நீ ஆற்றியவைகளை
மறந்திடும் நாளொன்றில்
இந்த மகளுக்கு
இவ்வுலகம் வைத்திடும்
பெயர் பிணம்!!!!!!!!!!
வாழ்க்கை
பெண்மனம்
மனம்
பெண்மை
தேடல்
நிஜம்
அம்மா என அழைக்கும்
அன்பு மகனின் குரல்
அத்தை என விளிக்கும்
ஆசை மருமகளின் அரவணைப்பு
பாட்டி யென பாசமாய்ப்
பேசும் பால்மணம் மாறாத
பச்சிளம் பேத்தி..
அள்ள அள்ளக் குறையாத
இவர்களின் அன்புக்கடலில்
திளைத்துக் கொண்டிருந்த நான்
திடுக்கிட்டு விழித்தேன்...
கலீர் எனக் காலையில் அடித்த
எங்கள் முதியோர் காப்பக
மணியின் ஒலியில்!!!!!!
பொய்
நடிப்பு
தியாகம்
பிரிவு
பேச்சு
பேறு
Subscribe to:
Posts (Atom)