Thursday, November 19, 2009
ஆனந்தம்
உலகில் உள்ள வண்டுகளெல்லம்
என்னையே சுற்றி வட்டமிடுகின்றன...
தேனினும் இனிய உன் உன்னத
நட்பின் மழையிலல்லவா
நான் நனைந்துகொண்டிருப்பது!!!!
களங்கமில்லாத உன் நட்பின்
கதகதப்பில் குளிர்காய்வதால்
துன்பத்தால் ஈரமாகிய என்
இமைகள் வறண்டு,
இன்பத்தால் மட்டுமே
ஈரமாக தொடங்கிவிட்டது
என் இருண்ட இதயம்..!
வானுலகின் அழகிய தேவதைகளெல்லாம்
என் மீது அழுக்காறு கொண்டு
வாதிடுகின்றன,
வல்லவனாம் அந்த இறைவனிடம்...
சுவர்க்கதில் காணக்கூடிய களிப்பினை
பூவிலகில் பூத்திருக்கும்
பூவையான எனக்கு மட்டும் சொந்தமாக்கியதற்கு…
வலியைமட்டுமே கண்டிருந்த எனக்கு
வாழ்வின் வண்ணத்தையும் காட்டிய
விலைமதிப்பில்லாத உன் நட்பு
முறிந்திடும் நாளது நான்
இறந்திடும் நாளாகத்தான்
நிச்சயமாய் இருக்க முடியும்!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment