Thursday, November 19, 2009

விண்ணப்பம்



அன்றொரு நாள்
அக்கினியாய் அவதரித்து
அழகிய உயிர்களை
அஸ்தியாக்கி
அகங்குளிர்ந்தாய்....

வேறொரு நாள்
வெள்ளலையாய்
வெகுண்டெழுந்து
எள்ளளவும் தயங்காமல்
எண்ணற்ற உடல்களை
உள்ளிழுத்துக்
குதூகலித்தாய்....


பின்னொரு நாள்
பூகம்பமாய்ப்
பூப்போன்ற மனிதர்களை
புதைகுழிக்குள் தள்ளிவிட்டுப்
புரியாமல் புன்னகைத்தாய்...

இப்படி
நாளொரு விதமாய்
நீ சீறுவதால்
நாங்கள்
நஷ்டப்பட்டவை
நாவிலடங்கா!!!!!

இன்பத்தை
எதிர்நோக்கும்
உள்ளங்களுக்கு
இன்னலை மட்டுமே
நல்கிடும்
இயற்கையே.....
எங்களை
இனியாவது
வாழவிடு!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment