Thursday, November 19, 2009

தேவதை



என்
விழிகளில் அழுதிட
இதழ்களில் சிரித்திட
இமைகளில் உறங்கிட
இம்சையை இரசித்திட
வெற்றியில் களித்திடத்
தோல்வியில் துவண்டிட
முத்ததில் மகிழ்த்திட
சித்தத்தை செதுக்கிட
உதிரத்தைத் துடைத்திட
உயிருடன் கலந்திட
இன்பத்தைப் பெருக்கிட
இன்னலைக் களைந்திட
இறைவனால் பரிசளிக்கப்பட்ட
இனிய தேவதை நீ......
அம்மா,
உனக்கு நான் பட்ட கடனதை
எத்தனை பிறவி எடுத்தும்
தீர்க்க முடியாத நிலையில்
ஒன்று மட்டும்
உறுதி செய்கிறேன்....
உன்
உயிர்த்துளியாகக்கருதி
எனக்கு நீ ஆற்றியவைகளை
மறந்திடும் நாளொன்றில்
இந்த மகளுக்கு
இவ்வுலகம் வைத்திடும்
பெயர் பிணம்!!!!!!!!!!

No comments:

Post a Comment