Thursday, November 19, 2009

வீறு கொண்டு எழு



மனிதா
நீ சாதிக்கப்பிறந்தவன்
உனக்கு பாதகம் செய்யும்
பகைவரைக் கண்டு
பதறிவிடாதே...
மனிதா
நீ வாழப்பிறந்தவன்
உன்னை வீழ்த்த நினைக்கும்
உள்ளங்களை எண்ணி
உடைந்துவிடாதே...
மனிதா
நீ போற்றுதலுக்குரியவன்
உன்னைத் தூற்றத்துணியும்
உதடுகளை நினைத்துத்
துயரடையாதே...
மனிதா
உன் கண்ணீர் விலைமதிப்பற்றது
உன்மீது கருத்தில்லாதவருக்காகச்
சிந்தி அதனை வீணடித்துவிடாதே...
மனிதா
தோல்விகள் உன்னைத்
துரத்தும்பொழுது
துவண்டுவிடாதே
துள்ளிவரும் அலைகள்
போலத் துணித்தெழுந்திடு
ஏனென்றால்....
தோல்வி என்பது முடிவல்ல.....
வெற்றியின் முதற் பக்கம்!!!!!!!!!!

No comments:

Post a Comment