Sunday, September 5, 2010

உனக்காக...


பிறை நிலவாய் இருந்த என்னை
முழு மதியாய் மாற்றியதில்
"இறை"-யதனின் பொருளதனை
இவள் மனதில் புகுத்தி விட்டாய்
கரையதனைப் பிரியாத
கடலன்னை யதுபோல- என்
உயிருறையும் நொடி வரையில்
உனக்காகத் துடித்திருப்பேன்!

இயல்பு

தேடிச்செல்லுகையில்
தேவதைகள் தெரிவதில்லை
வாடி வருந்துகையில் வாழ்க்கை
 விடையளிப்பதில்லை
மாயம் உலகென்று
உணரும் வரை மனம் காணும்
காயம் தனையாற்றக்
காலம் முன் வருவதில்லை!

Friday, July 16, 2010

வாழ்க்கை

இறந்தகால
ஏமாற்றங்களின்
நினைவுகளிலும்....
எதிர்கால
யத்தனிப்பின்
எண்ணங்களிலும்
கரைந்துவிடுகின்றன..
கையிலிருக்கும்
கற்கண்டான
நிகழ்கால
நிமிடங்கள்...