Thursday, November 19, 2009

நிஜம்



அம்மா என அழைக்கும்
அன்பு மகனின் குரல்
அத்தை என விளிக்கும்
ஆசை மருமகளின் அரவணைப்பு
பாட்டி யென பாசமாய்ப்
பேசும் பால்மணம் மாறாத
பச்சிளம் பேத்தி..
அள்ள அள்ளக் குறையாத
இவர்களின் அன்புக்கடலில்
திளைத்துக் கொண்டிருந்த நான்
திடுக்கிட்டு விழித்தேன்...
கலீர் எனக் காலையில் அடித்த
எங்கள் முதியோர் காப்பக
மணியின் ஒலியில்!!!!!!

No comments:

Post a Comment