Wednesday, April 10, 2013

இன்றைய “பரதேசி”கள்







 



நம் முன்னோர்கள்
தேயிலைத்தோட்டத்தில் தம்
செந்நீரைச் சிந்தியதைக் கண்டு
கண்ணீர் விடுவதோடு மட்டும்
முடிந்துவிடவில்லை நம் கடமை...

சுதந்திரம் கிடைத்த பின்னும்
சொந்த மண்ணை விட்டுவிட்டு
வெள்ளையன் தன் வயிற்றைக்
கழுவப் படைத்திட்ட
பன்னாட்டு நிறுவனங்களில்
தன்னையே அர்ப்பணித்து
இரவு பகல் பாராமல்
எந்நேரமும் பணிபுரியும்

இன்றைய படித்த “பரதேசி” களாகிய நாம்
விழித்துக்கொள்வதில்
விதைக்கப்பட்டிருக்கின்றது
நம் நாட்டின்
விதியும்
விடிவுகாலமும் !!!!!

No comments:

Post a Comment