Thursday, April 18, 2013

குடும்பம்








ஆலமர நிழல் போல 
அழகானதோர்  கூறையின்  கீழ் 
அண்ணன் தம்பி ஐவர் மற்றும்  
அவர்தம் மனைவி மக்கள் சுற்றம் 
அழைத்ததும் ஓடிவரும்  ஐந்தாறு பணியாள் 
அறுசுவை சமைத்திடும் அடுக்குளை நளன்மார் 
ஆடு, மாடு, கோழி, குருவி 
அறிவுரை வழங்கிடும் கிழவன் கிழவி என 
அன்பின் இலக்கணமாய்த் திகழ்ந்த 
அன்றைய "கூட்டுக்குடித்தனங்கள்"
இன்றும் காணப்படுகின்றன...
வெறும் வரலாற்றுச் செய்திகளாய்ப் 
பத்திரிகைகளில் மட்டும் !!!!!

No comments:

Post a Comment