Monday, November 7, 2016

தொலைவு




ஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் கதைகள்.....
ஒருவர் அருகில் மற்றொருவர் உட்கார்ந்து
கதைத்திட்ட  காலம் போய் ....
என்று  காண்போமோ எனும்
ஏக்கத்துடன் ஏந்திக்கொண்டு
ஒற்றைக் கைப்பேசியின் .
ஒரு முனை நீயும்

மறு முனை  நானும்!!!!

No comments:

Post a Comment