Thursday, August 3, 2017

அறிவுரை

"வல்லமை" (ISSN: 2348 – 5531)  மின்னிதழின்  'படக்கவிதைப் போட்டி 120'-ல் சிறந்த கவிதையாகத் இக்கவிதை தேர்ந்தேடுக்கப் பட்டது என்பது குறிப்பிடக் தக்கது
_________________________________________

சின்ன சின்ன விரல்கள் கொண்டு
சிறு கோல மிடும் பைங்கிளியே
சிறிய தொரு அறிவுரையை
செவி மடுத்துக் கேட்டிடுவாய்…

இன்று,
உன் எண்ணமதை ஒருங்கிணைத்து
வண்ண வண்ண நிறங்கள் தீட்டி
வாசல் கோலம் நிறைவு செய்து
வீட்டி னுள்ளே நுழைந் திடலாம்

ஆனால்
வாழ்க்கை கோலம் என்னவென்று
வஞ்சி உனக் கெடுத் துரைக்க
நாளை எனும் நாட்கள் கொண்ட
வருங் காலம் காத்திருக்கு!!!

தாயாக  ஒரு கோலம்,
தாரமாக மறு கோலம்,
வன்மம் கொண்ட கயவர் காணின்
வீறு கொள்ளும் சினக் கோலம்..

நெடு தூர பயணங்கள்
உனக்காகக் காத்திருக்க
தடம் புரண்டு செல்லாமல்
தரணியதை நீயும் வெல்லு

வாழ்க்கை செல்லும் பாதையிலே
பின் தொடர்ந்து போவதிலே
வழித்தடத்தை தொலைக்கின்றோம்
நம் மரபுகளை மறக்கின்றோம் !!!!

சின்ன சின்ன மகிழ்ச்சிகளை
சிறைப் படுத்தி வைக்கின்றோம்
நம்மை நாமே மறக்கின்றோம்
மாற்ற மதில் கலக்கின்றோம்

ஆதலால்

ஓலம் பல வரினும்,
ஞாலம் எது தரினும்;
உன்னை நீயே தொலைக்காமல்
உன் தனித்துவத்தை இழக்காமல்

உன் காலம் உள்ள அதுமட்டும்
உயிர் காற்று உள்ள அதுமட்டும்
இன்று போல என் றென்றும்
கோல மிட்டு மகிழ்ந்து இரு !!!!!

No comments:

Post a Comment