Sunday, August 19, 2018

எனக்கான தருணங்கள்

15th ஜூலை 2018 அன்று  'வல்லமை' மின்னிதழில் இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது




கரம் பிடித்த நிமிடம் முதல்
உயிரே உன் துணைவி யாக;
கரு வினிலே சுமக்கா விடினும்
உன் அன்னையை என் தாயாக;
கல்வி கேள்வி நல்கா விடினும்
உன் தந்தையை என் தகப்பனாக;
ஒரு வயிற்றில் பிறக்கா விடினும்
உன் சகோதரியை என் தங்கையாக;
மைத்துனன் கொழுந்தன் மாமன் மாமி
தமையன் தமைக்கை மற்றும் மருகன்
என் றுன்னுற வினரனை வரையும்
யென்னுறவாய் நெஞ்சில் சுமந்து கொண்டு ;
உன் இல்லத்தில் உன் இடத்தை
நிரப் பிடும் நற்பணி யேற்றேன் !!!
என்ன வனே யென்னை யீன்ற
அன்னை தந்தை இரு வருடன்;
தன் னலம் சிறிதும் இன்றி
எம் நன்மை பேணும் தோழியுடன்;
கன்னம் தொட்டு என்னைக் கொஞ்சும்
அண்ணன் தம்பி அனைவருடன்;
ஆசை யுடன் சில நொடிகள்
உரை யாடக் கூடு மென்னில்….
நீயாக நான்மாறி நானாற்றும் பணிஓய்ந்து
அவரவர் தேவைகளை மருமகளாய்ப் பூர்த்திசெய்து
உறவினர் குழுமியுள்ள உன்னகத்தின் புறம்வந்து
நானாக நானிருக்கும் எனக்கான தருணங்கள் !!!

No comments:

Post a Comment