3rd June 2018 அன்று வெளிவந்த தினமணி கவிதைமணி இதழில் இந்த கவிதை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
கையில் பிடிக்கும் நொடிக்குள்ளே
காற்றாய் பறக்கும் தும்பிபோல்
பொய்யாய் போகும் கனவுகளை
நெஞ்சில் நிதமும் சுமக்கின்றோம்
எட்டாக் கனியென இருந்தவைகள்
எட்டிப் பிடித்திடும் தருணத்தில்
தட்டிப் பறித்திடும் காலத்தால்
ஏமாற்றத்தில் திளைக் கின்றோம்
நிலையே இல்லா வாழ்வுதன்னில்
நித்தமும் ஆயிரம் கோட்டைகளை
கட்டிக் கொண்டே இருக்கின்றோம்
இயல்பை ஏனோ மறக்கின்றோம்
காலச் சக்கரச் சுழற்சிக்குள்
கடந்து செல்லும் நிகழ்வுகளின்
கைதி யாகித் தவிக்கின்றோம்
சிக்கிச் சிறையில் கிடக்கின்றோம்
வாழ்க்கை என்பது போர்க்களமே
சூழ்ச்சியும் திருப்பமும் நிறைந்ததுவே
வீழ்ச்சியும் எழுச்சியும் தொடர்கதையாய்த்
துரத்தி வருவது சத்தியமே
சோதனை பலவகை வந்தாலும்
தோல்விகள் துரத்தி அடித்தாலும்
துவளா மனதிட மதுகொண்டால்
வெற்றி என்பது சாத்தியமே !!!
கையில் பிடிக்கும் நொடிக்குள்ளே
காற்றாய் பறக்கும் தும்பிபோல்
பொய்யாய் போகும் கனவுகளை
நெஞ்சில் நிதமும் சுமக்கின்றோம்
எட்டாக் கனியென இருந்தவைகள்
எட்டிப் பிடித்திடும் தருணத்தில்
தட்டிப் பறித்திடும் காலத்தால்
ஏமாற்றத்தில் திளைக் கின்றோம்
நிலையே இல்லா வாழ்வுதன்னில்
நித்தமும் ஆயிரம் கோட்டைகளை
கட்டிக் கொண்டே இருக்கின்றோம்
இயல்பை ஏனோ மறக்கின்றோம்
காலச் சக்கரச் சுழற்சிக்குள்
கடந்து செல்லும் நிகழ்வுகளின்
கைதி யாகித் தவிக்கின்றோம்
சிக்கிச் சிறையில் கிடக்கின்றோம்
வாழ்க்கை என்பது போர்க்களமே
சூழ்ச்சியும் திருப்பமும் நிறைந்ததுவே
வீழ்ச்சியும் எழுச்சியும் தொடர்கதையாய்த்
துரத்தி வருவது சத்தியமே
சோதனை பலவகை வந்தாலும்
தோல்விகள் துரத்தி அடித்தாலும்
துவளா மனதிட மதுகொண்டால்
வெற்றி என்பது சாத்தியமே !!!
No comments:
Post a Comment